

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் சண்முகபுரம் பாலாற் றங்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி மற்றும் அர்த்தநாரிப்பாளையம் வனப்பகுதியில் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாலாற்றின் நடுவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது.
கோயிலுக்கு செல்லும் தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. பாதுகாப்பு கருதி நேற்று கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை.
ஆற்றின் கரையில் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். ஆற்றில்வெள்ளம் குறைந்த பின், நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.