கடலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில்  உபரி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
Updated on
1 min read

கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 1.15 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி நீர் பிடி பகுதியில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி உபரி தண்ணீர்வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதனால் கல்லணையில் இருந்தும், முக்கொம்பிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கீழணையில் 9 அடி மட்டுமே தண்ணீரை தேக்க முடியும் என்பதால் நேற்று மாலை உபரி தண்ணீர் விநாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் அடி தண்ணீர்கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்ட கரையோரத்தில் உள்ள 50 கிராமத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில் கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் உள்ள 25 கிராமங்களில் நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.

தீயணைப்பு துறையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக் கப்பட்டு, சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்று பாலம் உள்ளிட்ட கரையோரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ரப்பர் படகு உள்ளிட்ட பாதுகாப்பு சாதணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வருவாய்த்துறையினர் கிராமங் கள் தோறும் ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கீழணைக்கு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வருவதால் கொள்ளிடம் ஆற்றில் படிப்படியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டு விநாடிக்கு சுமார் 2லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்ற வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in