தமிழகத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 9,896 குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.303 கோடி

தமிழகத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 9,896 குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.303 கோடி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.685 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், பெற்றோரை இழந்த 9,896 குழந்தைகளுக்கு ரூ.303 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல், மரணம் அடைந்த முன் கள பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல் ஆகிய செலவுகள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து செலவு செய்யப்பட்டது. இவ்வாறு 8.5.2021 to 30.6.2022 வரை கரோனா பணிகளுக்கு 685,82,20,000 ரூபாய் தமிழக அரசு செலவு செய்துள்ளது.

இதில் 379 முன் கள பணியாளர்களுக்கு ரூ.95.55 கோடி இழப்பீடு, 19 செய்தியாளர்களுக்கு 1.90 கோடி ரூபாய் இழப்பீடு, கரோனாவால் பெற்றோரை இழந்த 9896 குழந்தைகளுக்கு ரூ.303 கோடி இழப்பீடு, மருத்துவ உபகரணம், ஆர்டிபிசிஆர் கருவிகள் வாங்க 285,05,20,000 என்று மொத்தம் 685,82,20,000 ரூபாய் தமிழக அரசு செலவு செய்துள்ளது.

இந்த தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in