Published : 25 Oct 2016 09:23 AM
Last Updated : 25 Oct 2016 09:23 AM

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கிய 8 பட்டாசுக் கடைகளுக்கு சீல்

விருதுநகர் மாவட்டத்தில் விதி முறைளை மீறி இயங்கிய 8 பட்டாசு கடைகள் சீல் வைக்கப்பட்டன.

சிவகாசியில் கடந்த 20-ம் தேதி பட்டாசுக் கடையொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் இறந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் அனைத்து பட்டாசுக் கடைகளையும் ஆய்வு செய்ய வட்டாட்சியர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

அதன்படி, அருப்புக்கோட் டையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 பட்டாசு கடைகள் உள்பட 5 கடைகளுக்கு அதிகாரி கள் நேற்று முன்தினம் சீல்வைத் தனர்.

நேற்று விருதுநகர் மாவட் டத்தில் 31 பட்டாசுக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில் 16 கடைகளில் விதிமுறை மீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 15 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக் கப்பட்டதோடு, 3 பட்டாசுக் கடைகளுக்கும் நேற்று சீல் வைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x