வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

Published on

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மேல் நிலவும்வளிமண்டல சுழற்சி காரணமாக,தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல்அதிகனமழையும், தென்காசி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைமுதல் மிக கனமழையும், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

5-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல்மிகக் கனமழையும், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 6-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மித மான மழை பெய்யக் கூடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in