Published : 27 Oct 2016 09:07 AM
Last Updated : 27 Oct 2016 09:07 AM

பறவை காய்ச்சல் எதிரொலி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் ஏற்பட்டு பல பறவைகள் இறந்துள்ளன. இதனால் பல மாநிலங்களில் உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மயில், பஞ்சவர்ணக் கிளி, ஆந்தை, கூழைக்கடா, கிளுவை, செங்கால் நாரை, தட்டவாயன், உப்புக்கொத்தி, மடையான், சிறுவெண் கொக்கு, நத்தைகுத்தி நாரை, மரத்தாரா, பெரிய கொக்கு உள்ளிட்ட 87 பறவை இனங்களில் மொத்தம் 1,117 பறவைகள் பராமரிக்கப்படுகின்றன.

நாடுமுழுவதும் ஏவியன் இன்ப்ளூயன்ஸா நோய் பறவைகளுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பறவைகள் பராமரிக்கப்படும் பூங்காக்களில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது. இதைத்தொடர்ந்து வண்டலூர் உயி ரியல் பூங்காவில் தற்போது பறவைகள் கூட் டில் மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கி யுள்ளன. நீர் நிலைகளை சுற்றி சுண்ணாம்பு பவுடர் தூவப்படுவதுடன் நீர்நிலைகளில் சோடியம் குளோரைடு தெளிக்கப்படுகிறது.

இது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகி கள் கூறும்போது, “பூங்காவில் உள்ள ஒவ் வொரு விலங்கினங்கள் மற்றும் பறவையினங் களை நல்ல முறையில் பராமரிக்கிறோம். டெல்லியில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு பறவைகள் இறந்துள்ளதால், இங்கு அதிக கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். மேலும் பறவைக் காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x