ஆக.3-ம் தேதி ஆடிப் பெருக்கு: தருமபுரியில் உள்ளூர் விடுமுறை

ஆக.3-ம் தேதி ஆடிப் பெருக்கு: தருமபுரியில் உள்ளூர் விடுமுறை
Updated on
1 min read

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆடிப் பெருக்கை (ஆடி-18-ம் நாள்) முன்னிட்டு வரும் 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணி யாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in