Published : 30 Jul 2022 05:51 PM
Last Updated : 30 Jul 2022 05:51 PM

‘செவாலியே விருது’க்கு தேர்வான ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே விருது’ பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “பதிப்புத் துறையில் இந்தியா - பிரான்ஸ் இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x