Published : 30 Jul 2022 06:29 AM
Last Updated : 30 Jul 2022 06:29 AM

தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா

சென்னை: சென்னை, தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் 388 விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களது பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து பயிற்சி நிறைவு அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.

இம்மையத்தின் அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், "பயிற்சி முடித்த வீரர்கள் தங்களது பணியில் சிறந்து விளங்க பாடுபட வேண்டும்.

மேலும், அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களின் அறிவு மற்றும் திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய விமானப் படையின் முக்கிய விழுமியங்களை அடைவதற்கு எல்லா நேரங்களிலும் முன்மாதிரியான நடத்தையை கடைபிடிக்க வேண்டும்" என அவர் அறிவுறுத்தினார்.

பயிற்சியின்போது அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக, வீரர்கள் சச்சின் குமார், ஆதர்ஷ் ஆகிய 2 வீரர்களுக்கு் சிறந்த ஆல்-ரவுண்டர் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x