Published : 28 Jul 2022 05:36 PM
Last Updated : 28 Jul 2022 05:36 PM

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் வீரர்கள் அணிவகுப்பு: நாடுகளின் பதாகை ஏந்தி வந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் "ஒருவன் ஒருவன் முதலாளி பாடல்" உள்ளிட்ட பாடல்களின் பின்னணி இசை ஒலிக்க, பல்வேறு நாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டுள்ளார்.

நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடக்க விழா மேடை மின்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் மின்னும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மேடை அமைக்கப்பட்டுளளது.

இந்த மேடையில் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வீரர், வீராங்கனைகளின் அணி வகுப்பு நடைபெற்றது. 186 நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களின் நாட்டு கொடியுடன் அணிவகுப்பு வந்தனர்.

“ஒருவன் ஒருவன் முதலாளி” உள்ளிட்ட பல தமிழ்ப் பாடல்களின் இசை பின்னணியில் ஒலிக்க அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடுகளின் பெயர் பலகை அடங்கிய பதாகைகளை தமிழகம் முழுவதும் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற 186 அரசுப் பள்ளி மாணவர்கள் ஏந்தி அணிவகுப்பு வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரலை இங்கே...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x