Published : 28 Jul 2022 03:55 PM
Last Updated : 28 Jul 2022 03:55 PM

செஸ் ஒலிம்பியாட்: 87 பேருந்துகளில் நேரு விளையாட்டு அரங்கம் வந்த சதுரங்கப் படை

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள 87 பேருந்துகளில் வீரர், வீராங்கனைகள் நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று மதியம் முதல் 87 பேருந்துகளில் மாமல்லபுரத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நகரின் உள்ளே 8 இடங்களில் தப்பாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலை பண்பாட்டுத் துறை சார்பில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x