சுற்றுலா தொழில் வளர்ச்சியடைய வாகன ஓட்டுநர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுரை

சுற்றுலா தொழில் வளர்ச்சியடைய வாகன ஓட்டுநர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுரை
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவில் முதல்முறையாக, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல்ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து செஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் நோக்கில் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள 50 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு 3 நாட்கள் திறன் வளர்ப்பு மற்றும் கள ஆய்வு பயிற்சி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சுற்றுலா நட்பு வாகனத் திட்டத்தை மேம்படுத்தும் விதமாக, மாமல்லபுரத்தில் 25 ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டன.

அவர்களுக்கு சுற்றுலா தலங்கள் குறித்தவிவரங்களை வழங்குவதற்கும், கனிவாகவும், மரியாதையுடனும் சுற்றுலாப் பயணிகளுடன் பழகுவதற்காக புத்தாக்கப் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.

இதில் தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு பங்கேற்று, ‘‘சுற்றுலா பயணிகளை கைகூப்பி இன்முகத்துடன் வரவேற்பதுடன், கனிவாகவும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். இதைப் பின்பற்றினால் சுற்றுலா பயணிகளுக்கு அது நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர்கள் அதிக காலம் சுற்றுலா

தலங்களில் தங்கி பிற இடங்களைப் பார்க்க ஏதுவாக அமையும். இதனால் சுற்றுலா தொழில் வளர்ச்சியடைவதுடன், அதைச் சார்ந்த பல்வேறு தொழில்களும் வளரும் என்றார். நிகழ்ச்சியில் சுற்று லாத் துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in