தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான பிடிஎஸ் இடங்களுக்கு இன்று கலந்தாய்வு

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான பிடிஎஸ் இடங்களுக்கு இன்று கலந்தாய்வு
Updated on
1 min read

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு உள்ள பிடிஎஸ் இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கு உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இரண்டு கட்ட கலந் தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 எம்பிபிஎஸ், இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 16 பிடிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 330 எம்பிபிஎஸ் இடங்கள் மீதம் இருந்தன.

இந்நிலையில், இந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட தொடர்ச்சி கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. கலந்தாய்வில் தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு உள்ள 400க்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in