டெல்லி தேசிய இளையோர் திருவிழா: தமிழகத்திலிருந்து 83 இளைஞர்கள் பங்கேற்பு

டெல்லி தேசிய இளையோர் திருவிழா: தமிழகத்திலிருந்து 83 இளைஞர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை: டெல்​லியில் நடை​பெறும் தேசிய இளையோர் திரு​விழா​வில் தமிழகத்​திலிருந்து 83 இளைஞர்​கள் பங்​கேற்​கின்​றனர். சுவாமி விவே​கானந்​தரின் பிறந்​த​நாளான ஜனவரி 12-ம் தேதியை முன்​னிட்​டு, மத்​திய அரசு ஆண்​டு​தோறும் தேசிய இளையோர் திரு​விழாவைக் கொண்​டாடி வரு​கிறது.

அதன்​படி 29-வது தேசிய இளை​யோர் திரு​விழா டெல்லியில் ஜனவரி 9 முதல் 12-ம் தேதி வரை 4 நாட்​கள் நடை​பெற உள்​ளது.

‘வளர்ந்த இந்​தியா-இளம் தலை​வர்​கள் உரை​யாடல்' என்ற பெயரில் இந்த நிகழ்வு நடத்​தப்​படு​கிறது. திரு​விழா​வில் பங்​கேற்க ‘மை பாரத்' தளம் வழி​ யாக நடத்​தப்​பட்ட பல்​வேறு கட்​டத் தேர்​வு​களில், தமிழகத்​திலிருந்து சுமார் 4.20 லட்​சம் இளைஞர்​கள் கலந்​து​ கொண்​டனர்.

அவர்​களில் கட்​டுரை, பேச்​சு, கலைப் போட்​டிகள் மற்​றும் டிராக் சாம்​பியன்​ஷிப் அடிப்​படை​யில் 83 சிறந்த இளைஞர்​கள் இறு​திப் போட்​டிக்​குத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். ஜன.12-ம் தேதி நடைபெறும் நிறைவு விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்று இளைஞர்​களு​டன் கலந்​துரை​யாடு​கிறார்.

தேர்வு செய்யப்பட்ட இளைஞர்​களை ஆளுநர் ஆர்​.என்​.ரவி நேற்று நேரில் சந்​தித்து பாராட்டி வாழ்த்​துகளைத் தெரி​வித்​தார்.

டெல்லி தேசிய இளையோர் திருவிழா: தமிழகத்திலிருந்து 83 இளைஞர்கள் பங்கேற்பு
பணியிட பாதுகாப்பை உறுதி செய்வது தொழில்துறை கலாச்சாரமாக இருக்க வேண்டும்: அமைச்சர் கணேசன் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in