Published : 12 May 2016 09:42 AM
Last Updated : 12 May 2016 09:42 AM

அப்பா பைத்தியசாமி அவதரித்த நாள்: பிரச்சாரத்தை தவிர்த்த என்.ஆர்.காங். தலைவர்கள்

அப்பா பைத்தியசாமி குரு பூஜையை ஒட்டி தேர்தல் பிரச் சாரத்தை தவிர்த்துவிட்டு தனது வீட்டருகே உள்ள கோயிலில் முதல்வர் ரங்கசாமி பூஜையில் ஈடுபட்டார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், சேலத் திலுள்ள அப்பா பைத்திய சாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆன்மீக குருவாக அப்பா பைத்தியசாமி உள்ளார். இதனால் தனது வீட்டருகே கோயில் கட்டியுள்ளார். முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பாக சேலத் திலுள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்குச் சென்று அவர் வழிபடுவார்.

இதைக்கண்டு காங்கிரஸ் மாநிலத் தலைவர் நமச்சிவாயமும், அப்பா பைத்தியசாமியை வழி படத் தொடங்கினார். இதனால் காங்கிரஸ் அலுவலகத்தையும் அப்பா பைத்தியசாமி புகைப்படம் அலங்கரித்தது. தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து வருகிறது. தொகுதி வாரியாக ரங்கசாமி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அப்பா பைத்தியசாமி அவதரித்த தினம் என்பதால் சாமியின் குருபூஜை நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி நேற்று பிரச்சாரத்தை தவிர்த்து பக்தி பரவசத்தோடு தனது வீட்டருகே உள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்குச் சென்றார். தனது கையாலேயே அபிஷேகம், பூஜைகளை செய்த ரங்கசாமி மனமுருகி வழிபட்டார்.

கட்சி வேட்பாளர்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே சேலத்திலுள்ள அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு நேற்று காலை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் புறப்பட்டுச் சென்றார். சாமியின் குருபூஜையொட்டி சிறப்பு வழிபாட்டுக்காக நமச்சிவாயம் சென்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x