சென்னையில் கட்டிடக் கழிவுகளைக் கொட்ட அனுமதிக்கப்பட்ட இடங்கள் எவை? மீறனால் எவ்வளவு அபராதம்? - முழு விளக்கம்

சென்னையில் கட்டிடக் கழிவுகளைக் கொட்ட அனுமதிக்கப்பட்ட இடங்கள் எவை? மீறனால் எவ்வளவு அபராதம்? - முழு விளக்கம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கட்டிடக் கழிவுகளை கொட்ட வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை 15 மண்டலங்களில், அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். அதன் விவரம்:

  • திருவொற்றியூர் - பக்கிங்ஹாம் கால்வாய் சாலை, சாத்தங்காடு, திருவொற்றியூர்
  • மணலி - காமராஜ் சாலை, மணலி (மண்டல அலுவலகம் -2 அருகில்)
  • மாதவரம் - சி.எம்.டி.ஏ. டிரக் முனையம், இரவு காப்பகம் அருகில், மாதவரம் பேருந்து முனையம் பின்புறம்
  • தண்டையார்பேட்டை - வடக்கு அவென்யூ சாலை, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி
  • இராயபுரம் - கால்நடை டிப்போ (பகுதி), அவதான பாப்பையா சாலை, சூளை (சென்னை மாநகராட்சி பள்ளி எதிரில்)
  • தி.ரு.வி.க.நகர் - ஜமாலியா (பழைய லாரி நிலையம்) பெரம்பூர் நெடுஞ்சாலை
  • அம்பத்தூர் - மாணிக்கம் பிள்ளை தெரு, அம்பத்தூர்
  • அண்ணாநகர் - முதல் பிரதான சாலை, ஷெனாய் நகர் (கெஜ லட்சுமி காலனி அருகில்)
  • தேனாம்பேட்டை - லாயிட்ஸ் காலனி ( மாநகராட்சி ஐ.டி.ஐ நிறுவனம் அருகில் )
  • கோடம்பாக்கம் - குருசிவா தெரு.எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை கோடம்பாக்கம் (ஆர்10 எம்.ஜி.ஆர். காவல் நிலையம் அருகில்)
  • வளசரவாக்கம் - நடராஜன் சாலை சந்திப்பு மற்றும் பாரதி சாலை ( ராமாபுரம் ஏரி அருகில்)
  • ஆலந்தூர் - கிருஷ்ணா நகர் பிரதான சாலை, ஒத்தவாடை மயானபூமி அருகில்
  • அடையாறு - வேளச்சேரி மயானபூமி, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில்
  • பெருங்குடி - 200 அடி ரேடியல் சாலை, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம்
  • சோழிங்கநல்லூர் - கங்கை அம்மன் கோவில் தெரு விரிவு, காரப்பாக்கம் ( தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் அருகில் )

மீறினால் அபராதம்

இந்த இடங்களை தவிர்த்து வேறு இடங்களில் கொட்டுபவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் படி விதிக்கப்படும். 1 டன் அளவிற்கு குறைவான கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ரூ.2,000-ம், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5,000-ம் அபராதம் விதிக்கப்படும்.

20 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக கட்டிடக் கழிவுகளை உருவாக்குபவர்கள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள மறு பயன்பாட்டு மையங்களுக்கு கட்டிடக் கழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு கட்டிடக் கழிவுகளை அனுப்புவதற்கு முன் உரிய கட்டணத்தை சென்னை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்திய பிறகு கட்டிடக் கழிவுகள் கொட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in