தயிர், நெய் விலை உயர்வு: ஆவின் உத்தரவு 

தயிர், நெய் விலை உயர்வு: ஆவின் உத்தரவு 
Updated on
1 min read

சென்னை: தயிர், நெய் விலையை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விரி விதிப்பு காரணமாக ஆவின் தயிர், மோர், லஸ்ஸி, நெய் ஆகிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கும் ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வின் முழு விவரம் :

  • 100 கிராம் தயிர் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாய் ஆக உயர்வு
  • 200 கிராம் தயிர் 25 ரூபாயிலிருந்து 28 ரூபாய் ஆக உயர்வு
  • 500 கிராம் பாக்கெட் தயிர் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் ஆக உயர்வு
  • 1 கிலோ தயிர் 100 ரூபாயிலிருந்து இருந்து 120 ரூபாய் ஆக உயர்வு
  • 200 எம்எல் மேங்கோ மற்றும் சாக்லெட் லஸ்ஸி 23 ரூபாயிலிருந்து இருந்து 25 ரூபாய் ஆக உயர்வு
  • 20 எம்எல் நோய் எதிர்ப்பு சக்தி மோர் 15 ரூபாயிலிருந்து இருந்து 18 ரூபாய் ஆக உயர்வு
  • 1 லிட்டர் நெய் 535 ரூபாயிலிருந்து இருந்து 580 ரூபாய் ஆக உயர்வு
  • 500 கிராம் நெய் 275 ரூபாயிலிருந்து இருந்து 290 ரூபாய் ஆக உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in