Published : 05 May 2016 09:29 AM
Last Updated : 05 May 2016 09:29 AM
தமிழ்நாடு கத்தோலிக்க தமிழக ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
கிறிஸ்தவ மதச் சிறுபான்மை யினர் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளிடம் சில கோரிக்கைகளை முன் வைத்து ஏற்கும் கட்சிக்கு ஆதரவு தருவதென முடிவெடுக்கும்.
இந்த தேர்தலில் இக்கோரிக் கைகளுக்கான ஒப்புதல் தமிழக ஆயர்களிடம் இருந்து பெறப்பட் டன. திமுக பொருளாளர்ஸ்டாலின் தொடர்புகொண்டு எங்களுடைய கோரிக்கைகளை முன்வைக்கும் படி கோரினார். அதன்படி கோரிக்கைகளை முன்வைத் தோம். மத சார்பின்மையைக் காக்கவும், ஜனநாயக மதிப்பீடு களை வளர்க்கவும் திமுக- காங் கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாம் அறிந்த கூட்டணிக் கட்சிகளில் குறைவான தீங்குகளை உடையன என்பதால் இந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT