Published : 01 May 2016 04:49 PM
Last Updated : 01 May 2016 04:49 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி பாஜக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று பிரச்சாரம் செய்தார். தேன்கனிக்கோட்டையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி பெறும். பன்மொழி பேசும் மக்கள் கொண்ட தமிழகத்தில், தங்களது தாய்மொழிகளில் படிக்க அரசு வாய்ப்பு அளிக்க வேண்டும். நதிநீர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்றால் மத்திய அரசு தலைமையில் 2 மாநில அரசுகளும் இணைந்து சுமூகமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மோடி தலைமையிலான மத்திய அரசு, 2020-க்குள் வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும். பெண்களின் பெயரில் தான் வீடு இருக்கும். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால், அவர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாய பீமா என்ற புது திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் முனிராஜ், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் வேலாயுதம், மாவட்ட துணை தலைவர் கோபால்ரெட்டி, மாவட்ட செயலாளர் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT