Published : 07 May 2016 09:15 AM
Last Updated : 07 May 2016 09:15 AM

கொளத்தூரில் துர்கா ஸ்டாலின் பிரச்சாரம்

கொளத்தூர் தொகுதியில் 2-வது முறையாக ஸ்டாலின் போட்டியிடுகி றார். அவரை எதிர்த்து ஜே.சி.டி.பிரபாகர் (அதிமுக), பி.மதி வாணன் (தேமுதிக), எஸ்.கோபால் (பாமக), கே.டி.ராகவன் (பாமக), எஸ்.சேவியர் பெலிக்ஸ் (நாம் தமிழர்) உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதால் அவரது மனைவி துர்காவதி ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். தினமும் மாலை 4 மணிக்கு தனது குடும்பத்தினருடன் பிரச்சாரத்தை தொடங்கும் அவர், அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து வாக்கு சேகரித்து வருகிறார். அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை சந்திக்கும் அவர், அனைத்து குடும்பத்தின ரையும் ஓரிடத்தில் சந்தித்து அவர் களுடன் சகஜமான முறையில் கலந்துரையாடுகிறார்.

மக்களின் பிரச்சினைகளை ஆர்வத்துடன் கேட்பதுடன் அவற்றை குறித்துக்கொள்கிறார். ஸ்டாலின் வெற்றி பெற்றால் கொளத்தூர் தொகுதி தமிழகத்திலேயே வளர்ச்சி பெற்ற பகுதியாக மாறும் என வாக்குறுதி அளித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x