Published : 17 Jul 2022 12:40 PM
Last Updated : 17 Jul 2022 12:40 PM

கரோனாவிலிருந்து முதல்வர் ஸ்டாலின் குணமடைந்தார்: நாளை டிஸ்சார்ஜ்: காவேரி மருத்துவமனை

சென்னை: கரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுமையாக குணமடைந்துவிட்டதால், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "கரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார். கரோனா தனிமைப்படுத்துதல் காலம் நாளையுடன் நிறைவடைவதால், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அடுத்த ஒரு வாரத்திற்கு முதல்வர் வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பில், நூக்கம்பாளையம் மேம்பாலம், அரசன்கழனி ஏரி மற்றும் மதுரப்பாக்கம் ஓடை - தெற்கு டி.எல்.எப். ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 11-ம் தேதி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டத்திலும் முதல்வர் பங்கேற்றார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x