Published : 17 Jul 2022 04:25 AM
Last Updated : 17 Jul 2022 04:25 AM

சிவகங்கையில் அதிமுக பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்: திமுக பெண் பிரமுகர் மீது புகார்

சிவகங்கை

சிவகங்கையில் தேர்தல் முன்வி ரோதத்தில் அதிமுக பெண் கவுன்சிலரை திமுக பிரமுகர் வீடு புகுந்து தாக்கினார்.

சிவகங்கை நகராட்சி அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மனைவி ராதா. இவர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலின்போது ராதாவுக்கும், திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயமணி கணேசன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் ஜெயமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து கவுன்சிலர் ராதா வீட்டுக்குள் புகுந்து ராதா, அவரது மாமி யாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராதா, அவரது மாமியார் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து சிவகங்கை டவுன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x