

சென்னை: "கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளையோட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், " பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்!
கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்" இவ்வாறு அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.