Published : 17 May 2016 09:41 AM
Last Updated : 17 May 2016 09:41 AM

தமிழக தேர்தலை பார்வையிட்ட நேபாள அதிகாரிகள்

நேபாள நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் அயோத்ய பிரசாத் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேற்று சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

சென்னை மாவட்ட வாக்குச் சாவடிகளை பார்வையிட்டு, இங்கு நடைபெறும் தேர்தல் நடைமுறைகளையும், தேர்தல் கால விதிமுறைகளையும் தெரிந்துகொள்ள விரும்புவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அயோத்ய பிரசாத் யாதவ்வுக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தரமோகன், 2016 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர் பான அனைத்து முன்னேற்பாடு கள் குறித்து விளக்கமளித்தார். நேபாள தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, கால் சென்டர் உள்ளிட்ட இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x