நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 15-ம் தேதி இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

கூடலூர் சந்தையில் 23 செ.மீ மழை

சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். 14-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தையில் 23 செமீ, மேல் கூடலூரில் 22 செமீ, அவலாஞ்சியில் 19 செமீ, மேல் பவானியில் 18 செமீ, தேவாலாவில் 16 செமீ. மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in