Published : 02 May 2016 01:29 PM
Last Updated : 02 May 2016 01:29 PM

தென்னிந்தியாவில் காலூன்ற நேரம் வந்துவிட்டது: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விருப்பம்

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்ப டுத்த மத்திய அரசின் நட்போடு நடக்கும் ஆட்சி இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வெங்கய்ய நாயுடு அருப்புக்கோட்டையில் பேசியதாவது: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசின் நட்போடு நடக்கும் ஆட்சிதான் இருக்க வேண்டும். தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு பாஜக பாடுபடும். தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகளும், 20 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் இதுவரை மக்களுக்கு என்ன செய்துள்ளது?. மக்களுக்கு அடிப்படை தேவைகளைக்கூட திராவிட கட்சிகள் செய்யவில்லை.

காங்கிரஸ் - திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, ஊழல் நிறைந்த கூட்டணி. பாஜக தென்னிந்தியாவில் கால் ஊன்ற சரியான நேரம் வந்துள்ளது. அதிமுகவும், திமுகவும் ஊழலில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல ஊழலற்ற நேர்மையான ஆட்சி வேண்டும். அதற்கு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x