Published : 05 May 2016 09:37 AM
Last Updated : 05 May 2016 09:37 AM

முதல்வர் பிரச்சார பயணத்தில் மாற்றம்

முதல்வர் ஜெயலலிதா 8-ம் தேதி தஞ்சையிலும், 10-ம் தேதி அரக் கோணத்திலும், 12-ம் தேதி நெல்லையிலும் பிரச்சாரம் செய்வ தாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது பிரச்சார பயணத்தில் அவர் போட்டியிடும் தொகுதியான ஆர்.கே.நகரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை (6-ம் தேதி) முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கிறார்.

காசிமேடு பெட்ரோல் பங்க் அருகில் பிரச்சாரத்தை தொடங்கும் அவர், சூரிய நாராயண செட்டி தெரு - ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் பேசுகிறார். தொடர்ந்து, சூரிய நாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு, சேணியம்மன் கோயில் தெரு வழியாக, மார்க்கெட் தெரு - வ.உ.சி.சாலை சந்திப்பில் வாக்காளர்கள் மத்தியில் பேசுகிறார்.

பிறகு இளைய முதலி தெரு,வைத்தியநாதன் பாலம் வழியாகச் சென்று எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பில் பேசுகிறார். எண்ணூர் நெடுஞ்சாலை- ஜேஜே நகர் சந்திப்பு மற்றும் மணலி சாலை எழில் நகரிலும் பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x