Published : 03 May 2016 10:08 AM
Last Updated : 03 May 2016 10:08 AM
தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோர் நேற்று பகல் 11 மணிக்கு சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு தொடர்பாக ‘தி இந்து’விடம் பீட்டர் அல்போன்ஸ் கூறும்போது, ‘‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினோம். நாங்கள் மீண்டும் காங்கிரஸில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸ் பலமிக்க கட்சியாக மாற வேண்டும். எனவே, காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும். தமாகாவில் உள்ள அனைவரும் தாய் வீடான காங்கிரஸில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று தமாகாவினர் காங்கிரஸில் இணைய வேண்டும்’’ என்றார்.
சென்னை தீவுத் திடலில் நாளை மறுநாள் (5-ம் தேதி) நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்கிறார். அப்போது தமாகா முக்கிய நிர்வாகிகள் பலர் காங்கிரஸில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT