Published : 14 May 2016 08:49 AM
Last Updated : 14 May 2016 08:49 AM

காரைக்காலில் 144 தடை உத்தரவு

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நேற்று முதல் இரவு நேரங்களில் மட்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் வழங்கப்படுவதை தடுத்து, அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்தி முடிக்கும் விதமாக நேற்று முதல், இரவு 11- காலை 5 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சத்யேந்திரசிங் தர்ஸவாட் அறிவித்துள்ளார்.தடை உத்தரவு உள்ள நேரத்தில் எங்கும் 4 பேருக்கு மேல் கூடக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x