இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு: திருப்பூர் அதிமுகவினர் கொண்டாட்டம்

திருப்பூரில் அதிமுகவினர் ஒட்டிய வாழ்த்து போஸ்டர்
திருப்பூரில் அதிமுகவினர் ஒட்டிய வாழ்த்து போஸ்டர்
Updated on
1 min read

திருப்பூர்: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை வரவேற்று திருப்பூரில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டிய தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.‌ அதனை வரவேற்று தமிழகம் முழுவதும் உள்ள இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், திருப்பூர் மாநகர் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், காங்கேயம் சாலை, அவினாசி சாலை பகுதிகளில், "எடப்பாடி ஆதரவாளர்கள் கழகத்தின் இதயமாக விளங்கும் செயற்குழு மற்றும் பொதுக் குழுவால் ஒரு மனதாக, கழக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் எடப்பாடியாருக்கு வாழ்த்துக்கள்" என போஸ்டர்கள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in