Published : 05 May 2016 08:17 AM
Last Updated : 05 May 2016 08:17 AM

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது: சென்னையில் சோனியா இன்று பிரச்சாரம் - பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகை

தேர்தல் பிரச்சாரத்துக்காக தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழ கத்தை நோக்கி படையெடுப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக தலைமை யிலான கூட்டணிகள், பாமக, நாம் தமிழர் கட்சி என 6 முனைப் போட்டி நிலவுகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருப் பதால் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டுள்ளனர்.

இந்நிலையில், தங்கள் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக தேசிய தலைவர்கள் தமிழகத்துக்கு வரவுள்ளனர். இதனால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பட்டுக் கோட்டை, தென்காசி, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் நேற்று பிரச்சாரம் செய்தார். மீண்டும் அவர் 9-ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சென்னையில் பிரச்சாரம் செய்கிறார். சென்னை தீவுத்திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியாவுடன் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஓசூர், சென்னையில் நாளை நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசு கிறார்.வேதாரண்யம் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.வேதரத்தினம் போட்டியிடு கிறார். அவருக்கு ஆதரவாக வரும் 11-ம் தேதி வேதாரண்யம் அருகே யுள்ள தேத்தாக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

7-ம் தேதி ராகுல் வருகை

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, 7-ம் தேதி சென்னை வருகிறார். 3 நாட்கள் தமிழ கத்தில் தங்கியிருக்கும் ராகுல் காந்தி கோவை, மதுரை, சென்னை மதுரவாயல் ஆகிய இடங்களில் நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டங் களில் மு.க.ஸ்டாலினுடன் பங்கேற்று பேசுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி வேட்பாளர் வசந்தி தேவியை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற் கொண்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் அவர் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். மதுரையில் நேற்று பிரச்சாரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், திருச்சி லால்குடியில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று முதல் 3 நாட்கள் கன்னியாகுமரி, பழநி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செய லாளர் சுதாகர் ரெட்டி, 7-ம் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்கி றார். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, சென்னை தீவுத்திடலில் 8-ம் தேதி நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x