ராமதாஸ், அன்புமணி மீதான வழக்குகள் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமதாஸ், அன்புமணி மீதான வழக்குகள் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி மீதான வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போதைய பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது மாமல்லபுரம் போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நடந்தது.

மனுதாரர்களுக்காக வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது மாமல்லபுரம் போலீஸார் பதிவு செய்திருந்த 2 வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in