Published : 12 May 2016 09:41 AM
Last Updated : 12 May 2016 09:41 AM
திமுக, அதிமுக கட்சிகளால் தமிழகத்தில் ஊழலை ஒழிக்கவே முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெய்வேலி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமு கத்தை ஆதரித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது:
மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தவறுகள் நடக்காவண்ணம் நெறிமுறைக் குழு அமைத்து, அக்குழுவின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தப்படும். அதிமுக, திமுக கட்சிகளால் ஊழலை ஒழிக்கவே முடியாது. இவர்களுக்கு மாற்றாக ஒன்று வந்தால் மட்டுமே தமிழகத்தில் ஊழல் ஒழியும். அந்த மாற்றுதான் மக்கள் நலக் கூட்டணி.
நெய்வேலி தொகுதிக்குட் பட்ட என்எல்சி பிரச்சினையில் எங்களால்தான் நியாயம் கேட்க முடியும். மற்றவர்கள் கட்சிக்கு கட்டுப்பட்டுதான் நடக்க முடியும். திராவிடக் கட்சி களின் ஆட்சியில் மணல் கொள் ளைகள் நடைபெற்றன. மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கனிம வளங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT