

புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை கான் வென்ட் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக் கியநாதன் (55), ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி மரிய லூசியா (53). இவர்களின் இளைய மகள் லூர்துமரி (17). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஆரோக்கியநாதன் தனது மனைவி, மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், திடீரென எழுந்து வீட்டுக்கு வெளியே சென்றுள்ளார். அச்சமயம் மனைவி மற்றும் மகள் இருவரின் உடலிலும் தீப்பிடித்து எரிந்து அலறினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இரு வருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டனர். அங்கு லூர்துமரி உயிரிழந்தார். மரிய லூசியா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீஸார் விசாரணை நடத் தினர். மேலும், மாஜிஸ்திரேட் மூலம்தீக்காயமடைந்த மரிய லூசியா விடம் வாக்குமூலம் பெறப்பட்டது. உடலில் ஏதோ ஒரு திரவம் (ஆயில், டீசல், பெட்ரோல்) தெளிக் கப்பட்டதை உணர்ந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆரோக்கியநாதன் மற்றும் அவரது உறவினர்கள் சிலரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே தாய், மகள் எரிக்கப்பட்டதற்கான கார ணம் குறித்தும், யார் இதனை செய்தனர் என்பது குறித்தும் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.