Published : 08 Jul 2022 06:08 AM
Last Updated : 08 Jul 2022 06:08 AM
சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை சிறப்பு புலனாய்வு பிரிவில் ஐ.ஜி.யாக பணிபுரிந்த கே.பவானீஸ்வரி, ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் துறை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யான ஏ.டி.துரைகுமார், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை எஸ்.பி.யாக இருந்த நிஷா பார்த்திபன், மத்திய அரசின் உளவுத் துறைக்கு அயல்பணியாக சென்றுள்ளதால், டிஜிபி அலுவலகத்தில் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT