Last Updated : 07 Jul, 2022 11:12 PM

 

Published : 07 Jul 2022 11:12 PM
Last Updated : 07 Jul 2022 11:12 PM

குள்ளஞ்சாவடி அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி எரிந்த  தனியார் பேருந்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தனியார் பேருந்து டிரான்ஸ்பார்மரில் மோதி எரிந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். எனினும், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

கடலூரில் இருந்து இன்று (ஜூலை 7) இரவு 7 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் விருத்தாச்சலம் புறப்பட்டு சென்றது. பேருந்து குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெரிய காட்டு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பைக்கில் வந்த கடலூர் பச்சியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் சபரிநாதன் (30), அதே பகுதியைச் சேர்ந்த பக்கிரி சாமி மகன் செந்தில்குமார் (38) ஆகியோர் மீது பேருந்து மோதியது. சிறுதுநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மோதியது.

இதில் பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு இறங்கியதால் அனைவரும் உயிர் தப்பினர். அரை மணி நேரத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்தது. அதேநேரம் பைக்கில் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த சபரிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செந்தில் குமாரும் உயிரிழந்தார். கடலூர் , குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு இடையே தீயை அணைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x