Published : 16 May 2016 02:36 PM
Last Updated : 16 May 2016 02:36 PM

திருப்பூரில் மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த பெண்

திருப்பூர் மாவட்டம் வல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மணப்பெண் ஒருவர் வாக்களித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் திருப்பூர் மாவட்டம் வல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மணப்பெண் ஒருவர் வாக்களித்தார்.

அவர் பெயர் சத்யப்பிரியா (21). அவருக்கும் குமரேசன் (24)-க்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் அவரது சொந்த ஊரான வல்லபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர் வாக்களித்தார்.

வாக்களித்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், தனது கணவரும் அவரது ஊரில் வாக்களிப்பார் என்றும் கூறினார். சத்யபிரியா பி.காம். படித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x