Published : 03 May 2016 09:36 AM
Last Updated : 03 May 2016 09:36 AM
தமிழகத்தில் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.
ஈரோட்டில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கூட்டாட்சி மற்றும் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதே புதிய வாக்காளர்கள், இளைஞர்கள், மகளிர் விருப்பமாக உள்ளது. குறிப் பாக மாணவர் சமுதாயத்தினர், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய ஆட்சிக்குத்தான் வாய்ப் பளிக்க வேண்டும் எனற முடிவோடு உள்ளனர்.
வைகோ போன்ற தலைவர்கள் மீது தாக்குதல் முயற்சி நடப்பது கண்டிக்கத்தது. தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற போது, வேட்பாளர்களுக்கு, தொண்டர் களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும்? தோல்வி பயத்தால் இதுபோன்ற தாக்குதல் நடை பெறுகிறது.
திமுகவினர் தேர்தலில் அதிமுக வுக்கு 3-வது இடம் என்கிறார்கள். அதிமுகவினர், திமுகவுக்கு 3-வது இடம் என்கிறார்கள். அவர்களே எங்களை 2-வது இடத்தில் இருப்ப தாக கருதத் தொடங்கிவிட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. மருத் துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு உத்தரவை மறுபரிசீலனை செய்து பழைய முறையை கடை பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT