Published : 04 May 2016 09:12 AM
Last Updated : 04 May 2016 09:12 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சி 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இதையொட்டி, கட்சியின் தேர்தல் அறிக்கையை மாநில தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று வெளியிட்டார்.
அதில் உள்ள முக்கிய அம்சங்கள்: ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தனிநபர்கள் குறைந்த விலைக்கு வாங்கி பயனற்ற தரிசாக வேலி அமைத்து பாதுகாக்கும் நிலையை நீக்குவோம். அத்தகைய நிலங்களை அரசே ஏற்று விவசாயத்துக்கு பயன்படுத்த வழிவகை செய்வோம். இந்து கோயில்களின் சொத்துக்கள், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்படும். கோயில்களில் தரிசனத்துக்கு பணம் வசூலிப்பது ரத்து செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT