Published : 02 May 2016 09:56 AM
Last Updated : 02 May 2016 09:56 AM

வைகோ மீது வழக்கு பதிவு

ஜாதி உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக வைகோ மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

அரியலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ராம.ஜெயவேலை ஆதரித்து, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் ஏப்ரல் 23-ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். வி.கைகாட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தபோது ஜாதி உணர்வைத் தூண்டும் வகை யில் பேசியதாகவும் முதல்வர் ஜெயலலிதா மீது ஆதாரமின்றி குற்றச்சாட்டு தெரிவித்ததாகவும் புகார்கள் கூறப்பட்டன.

இதுதொடர்பாக அரியலூர் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் அமுதா, விக்கிர மங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, ஜாதி உணர்வைத் தூண்டுதல் மற்றும் தனிப்பட்ட நபரை விமர்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வைகோ மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக மன்னார்குடியில் நேற்று முன்தினம் இரவு தேமுதிக வேட்பாளர் முருகையன் பாபுவை ஆதரித்து வைகோ பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x