

ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இலங்கை பெண் அகதி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரி ழந்தார்.
தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் கடற்கரையில் இலங் கையைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் (ஆண், பெண்) ஜுன் 26-ம் தேதி மயங்கிய நிலையில் கிடந்தனர். இவர்களை மெரைன் போலீஸார் மீட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், இலங்கை மன்னார் மாவட்டம், முருங்கன் பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் சிவன்(82), திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி(71) எனத் தெரிய வந்தது. இதில் பரமேஸ்வரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.