Published : 03 May 2016 09:54 AM
Last Updated : 03 May 2016 09:54 AM

திமுக பொய் பிரச்சாரம்: நடிகை விந்தியா விமர்சனம்

கரூர் தாந்தோணிமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து நேற்று முன்தினம் நடிகை விந்தியா பேசியது: கொளுத்தும் வெயிலைக்கூட சமாளிக்கலாம். ஆனால், பிரச்சாரத்தில் திமுகவினர் கூறும் பொய்களைத்தான் தாங்க முடியவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கை சிரிப்பை உண்டாக்குகிறது. விவசாயிகளைப் பாதிக்கும் மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவந்ததே திமுகதான். மதுக் கடைகளைத் திறந்த திமுக, மது ஒழிப்பு கொண்டு வருவதாகக் கூறுகிறது. கச்சத்தீவை தாரை வார்த்ததே திமுக ஆட்சியில்தான். ஆனால், தற்போது கச்சத்தீவை மீட்பதாகக் கூறுகின்றனர். 5 முறை ஆட்சியில் இருந்தபோது கண்டுகொள்ளாமல், தற்போது தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவதாக பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விந்தியா பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x