Published : 08 May 2016 12:58 PM
Last Updated : 08 May 2016 12:58 PM

மகனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெற்றோர் கைது

மகனை தாய், தந்தையே வெட்டிக் கொலை செய்துவிட்டு, 7 பேர் கொண்ட மர்மக்கும்பல் கொன்றதாக கூறி நாடகம் ஆடியது தெரியவந்தது.

கடலாடி வட்டம் சாத்தங்குடியைச் சேர்ந்த மாடசாமி மகன் காளிதாஸ்(27). இவர் தனது பெற்றோருடன் நரசிங்கக் கூட்டம் விலக்கு ரோடு அருகில் வசித்து வந்தார். கடந்த 4-ம் தேதி மாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது 7 பேர் கொண்ட மர்மக்கும்பல் வெட்டிக் கொலை செய்ததாக தந்தை கடலாடி போலீஸில் புகார் செய்தார். மேலும் தடுக்க முயன்ற தன்னையும் அரிவாளால் வெட்டிச் சென்றதாக தெரிவித்தார். கடலாடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்தனர்.

விசாரணையில் மாடசாமியும் (55), அவரது மனைவி பஞ்சவர்ணமும் (45) சேர்ந்து மகனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா உள்ளிட்ட மதுபோதைக்கு அடிமையான மகன் 2 திருமணங்கள் செய்து, 2 மனைவிகளும் குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டனர். மூன்றாவதாக ராமேசுவரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. மேலும் கஞ்சா போதையில் பணம் கேட்டு தொந்தரவு செய்ததும், பெற்றோரிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்ததும் தொடர்ந்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று பணம் கேட்டு தாய், தந்தையை காளிதாஸ் தொந்தரவு செய்துள்ளார். அதனால் மாடசாமியும், பஞ்சவர்ணமும் சேர்ந்து காளி தாசை அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளனர். கொலையை மறைக்கவே 7 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாக நாடகமாடியுள்ளனர். அதனையடுத்து மாடசாமி (55), பஞ்சவர்ணம்(45) ஆகியோரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x