Published : 11 May 2016 09:08 AM
Last Updated : 11 May 2016 09:08 AM

திண்டுக்கல்லில் கல்லூரி அலுவலகம், வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை

திண்டுக்கல்லில் என்.பி.ஆர். பொறி யியல் கல்லூரி அலுவலகம், அரசு பணிகள் ஒப்பந்ததாரர் வீடு, தனியார் கட்டுமான அலுவலகம் மற்றும் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி ஆகிய இடங்களில் நேற்று வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பக்குடியில் என்பிஆர் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் நிர்வாக அலுவலகம், திண்டுக்கல் - திருவள்ளுவர் சாலையில் இயங்கி வருகிறது. நேற்று காலை இந்த அலுவலகத்துக்கு வந்த திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த வருமானவரித் துறை அதி காரிகள் திடீர் சோதனை மேற் கொண்டனர். அலுவலகத்துக்குள் இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. மாலை வரை இந்த சோதனை நீடித்தது.

இதே நேரத்தில், திண்டுக்கல் பஸ் நிலையம் அருகேயுள்ள அரசு பணிகள் ஒப்பந்ததாரர் பி.ஜனகர் என்பவரின் வீடு, திண்டுக்கல் அருகே நொச்சி ஓடைப்பட்டியில் உள்ள வீடு, திண்டுக்கல்லில் உள்ள கட்டுமான அலுவலகமான கே.பி. கன்ஸ்ட்ரக் ஷன் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். 4 பிரிவுகளாகப் பிரிந்து வருமான வரித் துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில், சில ஆவணங் கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாக அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்களைக் கொண்டு, அங்கிருந்த ஊழியர் களையும் அழைத்துக்கொண்டு, நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரிக்கு அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற சோதனையின்போது, திண்டுக்கல் தொகுதி பறக்கும்படை அலுவலர் லீனா ரெஜினா உடன் இருந்தார். வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையின்போது, பல ஆவணங்களைக் கைப்பற்றியது தெரிய வந்துள்ளது. கரூர் பிரமுகர் அன்புநாதன் வீட்டில் நடந்த சோத னையின் தொடர்ச்சியாக, இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை தேர்தல் ஆணையத்தி டம் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை விவரங்களை தேர்தல் ஆணையம் தான் வெளியிட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x