Published : 14 May 2016 10:00 AM
Last Updated : 14 May 2016 10:00 AM
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அரசு வழக்கறிஞராகப் பணிபுரிபவர் ராஜ கார்த்திகேயன். இவர் ராமநாதபுரம் மாவட்ட வழக் கறிஞர் பிரிவு இணைச் செய லாளராகவும் உள்ளார். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர் களுக்கு உதவும் வகையில் தேர்தல் வழிகாட்டும் கையேடு களை இவர் தயாரித்தார். அந்த கையேடு பிரதிகள் அதிமுக வேட்பாளர்களுக்கு ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்டன.
தற்போது முகவர்களுக்கு பயன்படும் வகையில் வாக்குச் சாவடி முகவர் கையேடு மற்றும் வாக்கு எண்ணிக்கை மைய முகவர் வழிகாட்டும் கையே டுகளை அவர் தயாரித்துள்ளார். தலா 16 பக்கங்கள் கொண்ட இந்த கையேடுகளில் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் முறை உட்பட பல்வேறு விதிகள், முகவர்க ளுக்கான கடமைகள் விளக்கப் பட்டுள்ளன.
வாக்குச் சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், மாதிரி வாக்குப் பதிவு உட்பட கட்டாயம் பங்கேற்க வேண்டிய நடைமு றைகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல் ப டும் விதம், அதிகாரிகளிடம் பெற வேண்டிய சான்றிதழ்கள் குறித்து கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முகவர்க ளுக்கான கையேட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கையேடுகளையும் முகவர் களுக்கு வழங்குவதற்காக அதிமுக வேட்பாளர்களுக்கு வழக்கறிஞர் ராஜ கார்த்திகேயன் அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, ‘‘வாக்குச் சாவடி முகவர்களுக்கு வழிகாட்டும் கையேடு 234 தொகுதிகளில் நியமனம் செய்யப்படவுள்ள 66,001 முகவர்களுக்கு வழங் குவதற்காக ஒரு வாக்குச் சாவடிக்கு 3 கையேடுகள் வீதம் மொத்தம் 1.98 லட்சம் பிரதிகள் அனைத்து தொகுதி களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதே எண்ணிக்கையில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர் வழிகாட்டும் கையேடுகளும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த கையேடுகள் தேர்தலில் முக வர்கள் சிறப்பாகப் பணிபுரிய உதவும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT