Published : 15 May 2016 11:15 AM
Last Updated : 15 May 2016 11:15 AM
வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் வீரபாண்டி ராஜாவை ஆதரித்து, சேலம் அமானி கொண் டலாம் பட்டி பகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த திட்டமும் இல்லை. இந்தியாவிலேயே பொறுப்பற்ற முதல்வராக ஜெய லலிதா திகழ்ந்து வருகிறார். முல்லை பெரியாறு, காவிரி விவ காரம், மாணவர்கள் பிரச்சினை உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுதான் தனது கடமை என்று இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்துக்கு பின்னர் நிருபர் களிடம் அவர் கூறும்போது, ‘‘அதிமுகவினர் பணம் பட்டு வாடா செய்து வந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் பட்ட துன்பங் களை நினைத்துப் பார்த்து ஜெய லலிதாவை மக்கள் வீட்டுக்கு அனுப்ப உள்ளனர். தேர்தல் ஆணையம், உண்மையான ஆணையமாக செயல்பட வேண் டும். நாடாளுமன்ற தேர்தலில் மோசமாக நடந்துகொண்டது போல் தற்போதும் நடந்து கொள்கிறது என்ற சந்தேகம் உள்ளது” என்றார். இதைத் தொடர்ந்து ஓசூரில் இறுதி கட்ட பிரச்சாரத்தை இளங்கோவன் நிறைவு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT