Published : 28 Jun 2022 12:21 PM
Last Updated : 28 Jun 2022 12:21 PM

வாக்கி டாக்கி ஊழல் புகார் | தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற திமுக கட்டிய வேஷமா? - டிடிவி தினகரன் கேள்வி

டிடிவி தினகரன் | கோப்புப் படம்

சென்னை: பழனிசாமி கம்பெனியின் ஆட்சியில் மீனவளத்துறை சார்பாக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக கூறிய புகார் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற திமுக கட்டிய வேஷமா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "பழனிசாமி கம்பெனியின் ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்?

இது தொடர்பாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பிறகும் லஞ்ச ஒழிப்புத்துறை மழுப்பலான பதிலை தெரிவித்திருப்பது ஏன்?

அப்படியென்றால் திமுக-வும் முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றதான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தார்களோ?" என்று தினகரன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x