Published : 15 May 2016 11:41 AM
Last Updated : 15 May 2016 11:41 AM
அதிமுகவும், திமுகவும் விதிகளை மீறி தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவும், திமுகவும் இன்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் வலியுறுத்தி உள்ளோம்.
உரிய நேரத்திற்குள் பதில் அளிக்கவில்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT