Published : 20 May 2016 09:13 AM
Last Updated : 20 May 2016 09:13 AM

சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடந்துமுடிந்த வாக்கு எண்ணிக்கை

சென்னையில் 3 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடந்து முடிந்தது.

சென்னை மாவட்டத்தில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராய புரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டது. அதேபோல், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக் கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய 6 தொகுதி யில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்கு கள், கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்பட்டது.

அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், காலை 8 மணிக்கு வாக்கு கள் எண்ணும் பணி தொடங்கப் பட்டன. முதலில் தபால் வாக்கு கள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்சி முகவர் களின் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத் துக்குள், கட்சிகளின் முகவர்கள், பலத்த சோதனைக்கு பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணும் மையத்தினுள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், அவர் களுக்கு வழங்கப்பட்ட தாள்களை வைத்து எழுதும் அட்டைகளில் இருந்த இரும்பு கிளிப்புகள் அகற்றப்பட்டிருந்தன.

4,000 போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நிரு பர்களிடம் கூறியபோது: 16 தொகுதிகளின் வாக்குகளை எண் ணும் பணியில் 900 அலுவலர்களை நியமித்திருக்கிறோம். அவர் களுக்கு உதவுவதற்காக 1000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை பணி அமைதியாக நடைபெற 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணி அமைதியாக நடைபெற்று வருகிறது என்றார்.

சில தொகுதிகளில் தபால் ஓட்டுகளை எண்ணுவதில் குழப்பம் ஏற்பட்டதால், முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

கொண்டாட்டம் குறைவு

சென்னையில் அதிக தொகுதி களில் திமுக வெற்றிபெற்ற நிலையில், ஆட்சி பிடிக்க முடியாததாலும், அதிமுகவினர் பலர் சென்னையில் தோல்வி அடைந்ததாலும், வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு பெரிய அளவில் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் இன்றி அமைதியாக இருந்தது. தொண்டர்கள் கூட்டமும் குறைவாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x