Published : 21 May 2016 09:52 AM
Last Updated : 21 May 2016 09:52 AM

இன்று சிறப்பு பாஸ்போர்ட் மேளா

சென்னையில் இன்று சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது. இதில் 2 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் வசதிக்காகவும், அவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காத்திருக்கும் கால அவகாசத்தைக் குறைக்கவும் சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவை மையங்களில் இன்று (21-ம் தேதி) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது.

இதற்காக சென்னை சாலிகிராம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக சுமார் 2 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் இந்த பாஸ்போர்ட் மேளாவை சென்னை பிரிட்டிஷ் துணைத் தூதர் பாரத் ஜோஷி தொடங்கி வைக்கிறார். 2016-ம் ஆண்டில் சென்னையில் இதுவரை 3 சிறப்பு பாஸ்போர்ட் மேளாக்கள் நடத்தப் பட்டுள்ளன. இதன் மூலம், ஆயிரத்து 790 பேர் பயனடைந்துள்ளனர். இத்தகவலை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x