Published : 21 May 2016 09:52 AM
Last Updated : 21 May 2016 09:52 AM
சென்னையில் இன்று சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது. இதில் 2 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் வசதிக்காகவும், அவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க காத்திருக்கும் கால அவகாசத்தைக் குறைக்கவும் சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவை மையங்களில் இன்று (21-ம் தேதி) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது.
இதற்காக சென்னை சாலிகிராம், அமைந்தகரை மற்றும் தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்பதற்காக சுமார் 2 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் இந்த பாஸ்போர்ட் மேளாவை சென்னை பிரிட்டிஷ் துணைத் தூதர் பாரத் ஜோஷி தொடங்கி வைக்கிறார். 2016-ம் ஆண்டில் சென்னையில் இதுவரை 3 சிறப்பு பாஸ்போர்ட் மேளாக்கள் நடத்தப் பட்டுள்ளன. இதன் மூலம், ஆயிரத்து 790 பேர் பயனடைந்துள்ளனர். இத்தகவலை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT